News

நிக்கி கல்ராணி வீட்டில் திருடிய இளைஞர் !

Published

on

டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி அதை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் நிக்கி கல்ராணியின் வீட்டில் 19 வயது இளைஞர் தனுஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தன் வீட்டில் பணிபுரிந்த தனுஷ் என்ற நபர் மீது ஜனவரி 11-ம் தேதி காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார் நிக்கி கல்ராணி.

அந்த புகாரில் அவர் குறிப்பிட்டவை என் வீட்டிலிருந்து தனுஷ் என்பவர் பைகளுடன் வெளியே சென்றுள்ளார் அப்போது அவரை நான் பிடிக்க முயன்ற போது என்னிடம் இருந்து தப்பித்துவிட்டார். அதனையடுத்து என் வீட்டில் சோதனையிட்டபோது சுமார் ரூ.40,000 மதிப்புடைய கேமரா மற்றும் அவரது சில உடைகளை தனுஷ் திருடி சென்றது தெரியவந்தது. உடைகளின் மதிப்பு ரூ.1,20,000 இருக்கும் என்று கூறப்பட்டது.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் திருடி சென்ற தனுஷ் என்பவர் விருதாச்சலத்தை சேர்ந்தவர் என்பதும் கடந்த 5 மாதங்களாக இவர் நிக்கி கல்ராணி வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து தனுஷை திருப்பூரில் வைத்து கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர் அவரிடம் இருந்து நாய்க்கு முடி திருத்தும் கருவி மற்றும் சில உடைகளை கப்பற்றியுள்ளனர். தனுஷை விசாரித்த போது திருடிய கேமராவை கோயம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் விற்றுவிட்டு திருப்பூரில் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

அந்த இளைஞர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறிய நிக்கி கல்ராணி அவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்று விட்டாராம்.

Trending

Exit mobile version