News

நயன்தாரா படத்தை திரையிட மாட்டோம் – திரையரங்கு உரிமையாளர்கள் !

Published

on

இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து இம்மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் கனெக்ட்.

நயன்தாராவுடன் சத்யராஜ், வினய் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பேய் படமாக உருவாகியுள்ள இப்படம் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தனது மகளுடன் வீட்டில் இருக்கும்போது அமானுஷ்யங்களில் சிக்கி கொள்வதும் அதிலிருந்து எப்படி தப்புகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

99 நிமிடங்கள் ஓடும் இப்படம் இடைவேளை இல்லாமல் இப்படம் படக்குழு தெரிவித்துள்ளனர். வழக்கமாக இடைவேளை நேரங்களில் பார்வையாளர்கள் திரையரங்கு கேண்டீனில் உணவு பண்டங்கள் வாங்கி சாப்பிடுவது வழக்கம். அப்படி இருக்கும் போது கனெக்ட் படத்தை இடைவேலை இல்லாமல் திரையிட திரையரங்கு அதிபர்கள் மறுத்து விட்டனர்.

இது குறித்து தமிழ் நாட்டு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஶ்ரீதர் கூறும்போது ‘ நயன்தாரா நடித்துள்ள கனெட்க் படத்துக்கு இடைவேலை இல்லை என்று அவர்களே அறிவித்துள்ளனர். திரையரங்கு அதிபர்களுக்கு இதுபற்றி அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இடைவேளை இல்லாமல் எங்களால் படத்தை திரையிட முடியாது என்று தற்போது இவர் கூறியுள்ளார்.பொறுத்து இருந்து பார்க்கலாம் என்ன முடிவு எடுக்கிறார்கள் படக்குழு என்று.

Trending

Exit mobile version