News

தவறு செய்வது மனிதம் மன்னிப்பது தெய்வீகம்- த்ரிஷா !

Published

on

தான் கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில், நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “தவறு செய்வது மனித குணம்; மன்னிப்பது தெய்வீக குணம்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு காவல் துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த நிலையில் த்ரிஷா குறித்து தான் உள் அர்த்தத்துடன் எதுவும் பேசவில்லை என்றும் எனவே மன்னிப்பு கேட்க முடியாது என்றும் மன்னிப்பு கேட்கும் பரம்பரை கிடையாது என்றும் வீராவசமாக சமீபத்தில் அவர் பேட்டி அளித்திருந்தார். 

தற்போது த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான் இது குறித்து அவர் கூறியதாவது:

”எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன். ”  என்று தெரிவித்தார்.
 
இந்த நிலையில், நடிகை திரிஷா தன் எக்ஸ் தளத்தில் ‘தவறு செய்வது மனிதம். மன்னிப்பது தெய்வீகம் ‘என்று தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷா பற்றி சர்சைக்குரிய வகையில் பேசியதாக  பதிவு செய்யப்பட்ட  முன்ஜாமீன் கோரி நடிகர் வழக்கில் மன்சூர் அலிகான் மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version