News

பொன்னியின் செல்வன் படத்திற்காக சொந்த குரலில் பேசும் திரிஷா !

Published

on

இயக்குநர் மணிரத்னம் அவர்களின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் டப்பிங் பணியையும் தொடங்கியுள்ளனர். நடிகர்கள் ஜெயராம், நிழகள்கல் ரவி ஆகியோர் தங்கள் பகுதிக்கான டப்பிங் பணிகளை பேசி முடித்துவிட்டனர்.

இந்நிலையில் நடிகை திரிஷாவும் டப்பிங் பேசும் பணியை தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முந்தைய பல படங்களுக்கு திரிஷாவுக்கு வேரு பெண் டப்பிங் கலைஞர்கள் பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.

மங்காத்தா மற்றும் ஒரு சில படங்களுக்கு மட்டுமே திரிஷா சொந்த குரலில் பேசி நடித்துள்ளார். மிக நீண்ட ஒரு இடைவெளிக்கு பின்னர் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா சொந்த குரலில் பேசியுள்ளார். இந்த பட ஒரு வரலாற்று படம் என்ற காரணத்தால் தூய தமிழில் பேசியுள்ளார்.

இப்படத்தில் திரிஷா குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், லால், ரகுமான், அஸ்வின் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக தயாராகியுள்ளது. முதல் பாகம் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Trending

Exit mobile version