News

சாதாரண கணக்கே தெரியாத என் பெயரில் டுவிட்டர் கணக்கா? – நடிகர் செந்தில் புகார்

Published

on

40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர் செந்தில் அவர்கள். அ.தி.மு.க ஆதரவாளராகவும் பேச்சாளராகவும் பல இடங்களில் செயபட்டுள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் நடிக்கும் பல நடிகர் மற்றும் நடிகைகளின் பெயரில் போலி கணக்கு ஆரம்பித்து பதிவுகளை செய்து வருகிறது ஒரு கும்பல்.

இந்நிலையில் செந்தில் பெயரில் ஒரு போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை பற்றி விமர்சனம் செய்யும் விதமாக பல பதிவுகளை பதிவுட்டு இருந்தன.

இதை அறிந்த நடிகர் செந்தில் அவர்கள் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் போலி டுவிட்டர் கணக்கு சம்மந்தமாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செந்தில் எனக்கு சாதாக் கணக்கே தெரியாது இதுல டுவிட்டர் கணக்கு எப்படி எனக்கு தெரியும் என்று நகைச்சுவையாக பதிலளித்தார் பத்திக்கையாளர்களுக்கு.

Trending

Exit mobile version