Reviews

வாய்தா – திரைவிமர்சனம் !

Published

on

வா ராஹா சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில், சி.எஸ்.மகிவர்மன் இயக்கத்தில் மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெஸ்ஸிகா, நாசர் உள்ளிட்ட நட்சந்திரங்கள் நடித்துள்ள படம் வாய்தா.

ஓர் ஏழைச் சலவைத் தொழிலாளியான ராமசாமி மீது இருசக்கர வாகனம் மோதி, அவரது தோள்பட்டை எலும்பு முறிகிறது. அவருக்கு வக்காலத்து வாங்கும் ஊர் முக்கியப்புள்ளி இருசக்கர வாகனத்தைக் கைப்பற்றிப் பூட்டி வைக்கிறார். விபத்து ஏற்படுத்திய இளைஞரின் தந்தை, ராமசாமிடயிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறு தொகையை நஷ் ஈடாகத் தர முயல்கிறார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் முக்கியபுள்ளி. போலீஸ் வந்து ராம்சாமியை மிரட்டுகிறது. படிப்படியாக மோதல் முற்றி விவகாரம் நீதிமன்றத்திற்குச் செல்கிறது. அங்கே பல மாதங்களாக வழக்கு வாய்தா வாங்குவதிலேயே இழுத்தடித்துக்கொண்டு போய்விட, உதவி செய்யும் வக்கீலும் பணத்தைக் கேட்கிறார். முதலில் உதவி செய்ய வரும் அரசியல்வாதியும் இந்த முதியவருக்கு எதிராகத் திரும்புகிறார். தனியே அந்த முதியவர் வழக்கை எதிர்கொள்கிறார். இறுதியில் அந்த சலலைத் தொழிலாளிக்கு நீதியும் கிடைத்ததா? இழப்பீடு வாங்க முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஒரு சிறிய சம்பவத்தைக் கருவாக்கி,அதில் எவ்வளவு சாதி, அதிகார அரசியல் நடக்கிறது என்பதை அலசியிருக்கிறார் இயக்குநர் மகிவர்மன் சி.எஸ்.

நாசர், மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர்சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர் மற்றும் பலர் நடித்திருக்க ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் புதுமுகங்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை தந்து இயல்பாக நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்கள் சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும் பின்னணி இசையோ படத்திற்குள் நம்மை ஒன்றிணைய வைத்துள்ளார் இசையமைப்பாளர் லோகேஸ்வரன்.
ஒளிப்பதிவு-சேதுமுருகவேல் அங்காரகன், படத்தொகுப்பு-நரேஷ் குணசீலன் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.

சாதி வெறி பிடித்த சமூதாயத்தில் ஏழை எளிய முதியவர் விபத்திற்கான இழப்பீடு கிடைக்க நீதிமன்றத்தை நாடி நியாயம் கிடைக்க அரும்பாடுபடுவதை கருத்து பேதங்கள்,முரண்பாடுகளை முன்னிறுத்தி துணிச்சலாக சவாலாக இயக்கியுள்ளார் மகிவர்மன்.சி.எஸ்.
Vaaitha Review By Cinetimee

நாசர் தொடங்கி மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர் சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர் என அனைத்து கதாபாத்திரங்களும் உண்ர்வு களோடு ஒன்றியிருக்கின்றனர்.

சாதி ஆணவம், காதல், பிளவு, ஏழை மக்களின் வலி, இழைக்கப்படும் அநீதி, இழப்பீடு கிடைத்தாலும் அறியாமையால் இழக்கும் அபாயம், உயர் சாதியினரின் அடக்குமுறை, நியாயம் கிடைக்க வேண்டிய இடத்தில் எதிர்பாராதவிதமாக தீர்ப்பு கிடைப்பது என்று சமூக அக்கறையோடு கொடுத்திருந்தாலும் திரைக்கதையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் இன்னும் ஆழமாகப் பதிந்திருக்கும்.


மொத்தத்தில் வாய்தா நீதி என்பது ஏழைகளுக்கு எட்டா கனிதான்.

Trending

Exit mobile version