Connect with us
 

News

நீ பிழைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கு யாஷிகாவுக்கு வனிதா அறிவுரை !

Published

on

கடந்த வாரம் நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே கார் விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகா பலத்த காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் நெருங்கிய தோழியான வள்ளிச்செட்டி பவணி சம்மவ இடத்திலெயே உயிரிழந்தார்.

இந்த விபத்து பற்று நேற்று யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பதிவுகளை பதிவு செய்தார். இந்த பதிவை பார்த்த சிலர் யாஷிகாவை தகாத வார்த்தையில் திட்டியும் சிலர் யாஷிகாவுக்கும் ஆதரவாகவும் கமெண்ட் செய்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகை வனிதா நடிகை யாஷிகாவுக்கு கமெண்ட் மூலம் அறிவுரை ஒன்றை கூறியுள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது:- டார்லிங் யாருக்கு வேண்டுமானாலும் இது நடந்து இருக்கலாம். அதனால் தான் அதனை விபத்து என்கிறோம். பிறப்பும் இறப்பும் முன்பே முடிவு செய்யப்பட்டது. அதை எவராலும் மாற்ற முடியாது. உன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயத்திற்காக உன்னை நீயே குற்றம்சொல்வதை முதலில் நிறுத்து.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாதே. நீ தெளிவாக இருக்க வேண்டும். நன்றாக ஓய்வெடு, உடல்நலனை பார்த்துக்கொள். இந்த விபத்தில் இருந்து நீ பிழைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்” என வனிதா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.