Connect with us
 

News

ஆதரவற்ற தெரு நாய்களுக்கு இரண்டு டன் உணவு வழங்கி உதவிய நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் !

Published

on

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவரிடம் காட்டேரி, பாம்பன், பிறந்தநாள், பராசக்தி, கலர்ஸ், யானை ஆகிய தமிழ் திரைப்படங்களும் லாகம் என்ற கன்னட படமும் கையில் உள்ளதாம்.

இவ்வளவு பிஸியான நடிகையாக இருந்தாலும் சேவ் சக்தி என்ற அமைப்பு ஒன்றை சமூக நலப் பணிகளுக்காக செய்து வருகிறார். தற்போது இந்த நிறுவனத்தின் மூலம் ஊரடங்கு நேரத்தில் ஆதரவற்ற விலங்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.

Save Shakti Foundation நிறுவனர் வரலக்‌ஷ்மி சரத்குமார் அவர்களும் இணை நிறுவனர் சாயா தேவி அவர்களும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவு வழங்கப்பட்டு வருவதன் விவரங்களை அளித்தனர்.