Connect with us
 

News

விரைவில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் அடுத்த பட அறிவிப்பு !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இயக்கத்தில் உருவான படங்களில் அதிக செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம் மாநாடு இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதற்கு பின்னர் வெற்றி பட இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தாலும் இனி இவர் இயக்கத்தில் வெளிவரும் அனைத்து படங்களின் மேல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு என்பது மிக அதிகமாகவே இருக்கும்.

மாநாடு படத்தையடுத்து யாருடன் கூட்டணி அமைக்கவிருக்கிறார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்தனர். மாநாடு படத்தின் தாமத்தால் இவர் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார்.

அடுத்து அந்த படத்தைத்தான் திரைக்கு கொண்டுவரவுள்ளார் வெங்கட் பிரபு. இது வெங்கட் பிரபுவின் 10-வது படமாகும். தற்போது இதற்கு VP10 என்று பெயர் வைத்துள்ளனர் படக்குழு. மிக விரைவில் இப்படத்தின் அறிமுகத்தை வெளியிடவுள்ளாராம்.