Connect with us
 

News

திருமண சர்ச்சைக்கு இது வழக்கமான முட்டாள்தனம் என பதில் கொடுத்த விஜய் தேவரகொண்டா !

Published

on

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் ‘கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட்’ இந்த இரு படங்களுமே நல்ல வசூலை பெற்றது. இதையெல்லாம் தாண்டி இவர்கள் இருவருமே நல்ல ஜோடி பொருத்தம் என்று சினிமா வட்டாரங்களில் பேச ஆரம்பித்தனர்.

இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வெளியானது. அப்போது இந்த செய்தியை ராஷ்மிகா மறுத்து இருந்தார். தனக்கு திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு மோதிய வயது இல்லை என்றும் திருமணத்தை பற்றி யோசிக்க நேரம் இல்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனாலும் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்திக்கொள்வதாகவும் அதை புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகித்தான் வருகிறது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இந்த வருடமே திருமணம் செய்து கொள்வார்கள் என தெலுங்கு மீடியாக்கள் மற்றும் பத்திரிக்கைகளிலும் செய்தி நேற்றிலிருந்து தீயாக பரவி வருகிறது.

தற்போது இந்த செய்தியை நடிகர் விஜய் தேவரகொண்டா முற்றிலும் ஒரு முட்டள்தனம் என மறுத்துள்ளார். தற்போது ‘லைகர்’ படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் தேவரகொண்டா மும்பையில் இருக்கிறார். ராஷ்மிகாவும் சித்தார்த் மல்ஹோற்றாவுடன் இணைந்து நடிக்கும் ‘மிஷன் மஜ்னு’ படப்பிடிப்புக்காக மும்மையில்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.