News

மீண்டும் இணையும் விஜய்-பேரரசு – நடிகர் ரவி மரியா தகவல் !

Published

on

தளபதி விஜய் நடித்த திருப்பாச்சி மற்றும் சிவகாசி போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் பேரரசு. இவர் இயக்கிய இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட் படமாக அமைந்தது விஜய்க்கு. இந்த நிலையில் பேரரசு மற்றும் விஜய் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தற்போது நடிகர் ரவி மரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒரு பட முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரவி மரியா நடிகர் விஜய் அவர்களை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கப்போவதாகவும் அதற்கான வேலையை தற்போது பேரரசு பார்த்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

Trending

Exit mobile version