News

புற்றுநோயால் பாதித்த சிறுவனை நேரில் சந்தித்து நம்பிக்கையூட்டிய விஜய்சேதுபதி !

Published

on

நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனிதனாகவும் ரசிகர்களிடையே பாராட்ட படுபவர் விஜய் சேதுபதி. அந்த வகையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து அந்த சிறுவனுக்கு நம்பிக்கை வார்த்தைகளை கூறியுள்ளார் விஜய்சேதுபதி. இதற்காக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

புற்று நோயால பாதிக்கப்பட்ட சிறுவன் விஜய் சேதுபதியை பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாகவும். இதை கேட்ட சிறுவனின் தாய்-தந்தை விஜய்சேதுபதியின் ரசிகர் மன்றத்தை தொடர்பு கொண்டனர்.

இந்த தகவல் விஜய்சேதுபதி காதுக்கு போனதும் அடுத்த நொடியே உடனடியாக அந்த சிறுவனையும் அவருடைய குடும்பத்தினரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் சிறுவனும் அவரது குடும்பத்தினரும் விஜய்சேதுபதியை அவரது வீட்டில் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுவனை சந்தித்த விஜய்சேதுபதி வழக்கம் போல பாச முத்தம் ஒன்றை சிறுவனுக்கு கொடுத்தது போல் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அந்த சிறுவனிடம் நீ விரைவில் குணமாகிவிடுவாய் என்று நம்பிக்கையூட்டி சிறுவனை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

Trending

Exit mobile version