News

கர்ணன் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜ் வீட்டுக்கு சென்று பாராட்டிய விக்ரம் !

Published

on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் கடந்த 9-ம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவெற்பை பெற்று வருகிறது. வசூலிலும் மிரட்டி வருகிறது. திரையுல பிரபலங்களும் இப்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சீயான் விக்ரம் மாரி செல்வராஜ் இல்லத்திற்கே சென்று அவரை பார்த்து பாராட்டியுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இப்படம் கபடியை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன் மூலம் தயாரிக்கவுள்ளார்.

Trending

Exit mobile version