Connect with us
 

News

ஐதராபாத்தில் தொடங்கிய விஷால் நடிக்கும் புதிய படம் !

Published

on

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் 50 படங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவுள்ளன. தற்போது தெலுங்கானாவில் ஊரடங்கை தளத்தி படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. அங்கு விஷால் நடிக்கும் 31-வது படத்தின் படப்பிடிப்பு அங்கு தொடங்கியுள்ளது.

படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள பலரும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தினமும் படப்பிடிப்பு அரங்கு கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படுகிறது. உடல் வெப்ப பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.

படப்பிடிப்பு நீண்ட நாட்கள் தொடர்ந்து நடக்கும் என்றும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து படப்பிடிப்பு நடத்தப்படுவதாகவும் படப்பிடிப்பில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் விஷால் தெரிவித்துயுள்ளார்.

மேலும் விஷால் கூறும்போது படக்குழுவில் 55 பேர் உள்ளனர். அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம். தொற்று இல்லை என்று வந்தது. படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆகஸ்டு மாதம் சென்னை திரும்புவோம் என்றார்.