News

பிரபல தயாரிப்பாளர ஆர்.பி.சவுத்ரி மீது விஷால் போலீஸ் புகார் !

Published

on

பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி மீது விஷால் சென்னை தியாகராயநகர் துணை ஆணையிரிடம் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் மூத தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி பல வெற்றி படங்களை தயாரித்தவர். நடிகர்களான ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவாவின் தந்தையான இவர் பல படங்களுக்கு பைனான்ஸும் செய்து வருகிறார்.

விஷால் தயாரித்த ஒரு சில படங்களுக்கு ஆர்.பி.சவுத்ரி நிதியுதவிகள் செய்துள்ளார். அதற்கான ப்ரோட் நோட் பத்திரமும் பெற்றுள்ளார். வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த பின்னர் ப்ரோட் நோட் பத்திரத்தை என்னிடம் தராமல் ஆர்.பி.சவுத்ரி இழுபறி செய்து கொண்டிருக்கிறார். இது பற்றி விஷால் அவரிடம் பல முறை கேட்டும் சரியான பதில் கொடுக்கவிலையாம்.

இதனால் கோபம் அடைந்த விஷால் ப்ரோட் நோட் பத்திரத்தை வைத்து மோசடி செய்ய திட்டமுடுவதாக கூறி சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மீதும் ஆர்.பி.சவுத்ரி மீதும் தியாகராயநகர் துணை ஆணையரிடம் விஷால் புகார் அளித்துள்ளார்.

Trending

Exit mobile version