Connect with us
 

News

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும் துப்பவறிவாளன் 2 !

Published

on

மிஷ்கின் இயக்கத்தில் விஷாலின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் துப்பறிவாளன். இப்படத்தின் வெற்றியால் இதன் இரண்டாம் பாகம் துப்பறிவாளன் 2 படத்தின் அறிவிப்பும் வெளியானது. லண்டனில் பட வேலையை ஆரம்பித்தனர். ஆனால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக இயக்குநர் மிஷ்கின் இப்படத்திலிருந்து விலகினார்.

அந்த பிரச்சனையின் எதிரொளியாக இருவரும் பல மேடைகளில் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தனர். பின்னர் துப்பவறிவாளன் 2 பாகத்தை நானே இயக்குகிறேன் என்று விஷால் அறிவித்தார்.

விஷால் அறிவித்து சுமா 1 வருடங்களுக்கு மேலாகவும் இன்று வரையில் படப்பிடிப்பு தொடங்கவேயில்லை. ஆனால் வேறு படங்களில் நடித்து வந்தார் விஷால்.

இந்த நிலையில் தற்போது துப்பறிவாளன் 2 பாகத்தின் கதையில் சில மாற்றங்களை செய்து வரும் விஷால் 2022 ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பை லண்டனில் ஆரம்பிக்க போவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். படத்தின் முக்கிய கதைக்களம் லண்டன் நகரத்தில் நடப்பது போன்று உருவாகிறது இப்படம்.