Connect with us
 

News

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிப்பாரா?

Published

on

ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பி முடித்துவிட்டு அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். 2 வாரங்கள் அமெரிக்காவிலேயே தங்கியிருந்தார்.இன்று சென்னை திரும்பியுள்ள அவர் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபடவிருக்கிறார்.

அடுத்த புதிய படத்தில் நடிக்கவும் தயாராவதாகவும் தகவல் வெளியாகியுள்ள. அதிக செலவு இல்லாமல் குறைந்த நாட்களில் எடுக்கும் படமாக இருக்க வேண்டும் வெளி மாநிலங்களுக்கு போகாமல் செனையிலேயே பெரும்பாலான படப்பிடிப்பை நடைத்த வேண்டும் என்றும் ரஜினி விரும்புவதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் புதிய படத்தை இயக்கும் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகியோர் பெயர் அடிபடுகின்றன. கார்த்திக் சுப்புராஜின் பேட்ட படத்தில் ரஜினி ஏற்கனவே நடித்துள்ளார். தேசிங்கு பெரிய சாமி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியவர்.

மூவரும் ரஜினிக்கு கதை சொல்ல தயாராகவுள்ளார்களாம். இவர்களில் ஒருவர் ரஜினி படத்தை இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினியின் புதிய படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.