News

பிரபுதேவா – வடிவேலு நடிக்கும் ‘பேங் பேங்’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது !

Published

on

தமிழ் திரையுலகின் மறக்க முடியாத வெற்றிக் கூட்டணியான நடிகர் பிரபு தேவா மற்றும் வைகைப்புயல் வடிவேலு மீண்டும் இணைந்து நடிக்கும் ‘பேங் பேங்’ புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

1990-களில் பிரபு தேவா – வடிவேலு கூட்டணி காதலன், ராசையா போன்ற படங்களில் செய்த அலப்பறைகள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் திரையில் ஒன்று சேருவது சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்ததை முன்னிட்டு, படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த விடியோ ஒன்றையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர ராஜாவின் இசையில் உருவாகும் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version