News
பைசன் எனக்கு பல அனுபவத்தை கொடுத்தது – அனுபமா பரமேஸ்வரன் !
பைசன் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய இப்படத்தின் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் படத்தில் நான் திருநெல்வேலியை சேர்ந்த ராணி என்ற கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன் அந்த அனுபவம் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. “நான்தான் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்திருக்க வேண்டும் சில காரணங்களால் அது அப்போது நடிக்கவில்லை.
நான் பிரேமம் படத்தில் நடித்த போது எனக்கு ஒரு மன நிறைவு கிடைத்தது நிறைய கற்றுக்கொண்டேன். அந்த அனுபவம் பைசன் படத்தில் நடித்த போதும் கிடைத்தது. திருநெல்வேலி வயலில் இறங்கி நாட்டு நடுவது, செங்கல் சூளையில் வேலை செய்வது என பல புதிய அனுபவங்கள் எனக்கு கிடைத்தன. அங்குள்ள மக்களுடன் பழகியது மிகவும் மகிழ்ச்சியான தருணம். துருவ் விக்ரம் அக்காவாக நடித்திருக்கும் ரஜிஷா விஜயனும் நானும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டோம் இப்போது என்று கூறினார்.
