Reviews

இட்லி கடை – திரைவிமர்சனம் !

Published

on

Cast: Dhanush, Arun Vijay, Nithya Menen, Raj Kiran, Sathyaraj
Production: Dawn Pictures And Wunderbar Films Pvt Ltd
Director: Dhanush
Screenplay: Dhanush
Cinematography:Kiran Koushik
Editing: G.K Prasanna
Music: GV Prakash
Language: Tamil
Runtime: 2H 27Mins
Release Date: 1 October 2025

தயாரிபாளர் ஆகாஷ் பாஸ்கர் தயாரிப்பில், நடிகர் தனுஷ்,நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இயக்குனர் தனுஷ் இயக்கத்தில். இட்லி கடை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.தற்போது இப்படத்தின் விமர்சனதை பார்போம்.

கதை களம்:
நடிகர் ராஜ்கிரண் தனது ஊரில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய இட்லி கடைதான் அந்த ஊருக்கே அடையாளமாகவும் உள்ளது. ராஜ்கிரணின் மகனான தனுஷ் தனது தந்தையை போலவே தானும் ஆகவேண்டும் என்பதற்காக கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு, வெளியூருக்கு வேலைக்கு செல்கிறார். சொந்த ஊரை விட்டு தனுஷ் செல்வது ராஜ்கிரணுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், தனது மகனின் ஆசைக்காக அவர் சரி என சொல்ல ஊரில் இருந்து புறப்படுகிறார் தனுஷ். வருடங்கள் செல்ல, சத்யராஜின் ஏஃப்சி நிறுவனத்தில் மூத்த செஃப் ஆக இருக்கிறார் தனுஷ். ஆனாலும், அவருக்கு தனது சொந்த ஊரில் இருக்கும் மன நிம்மதி அங்கு இல்லை.

சத்யராஜின் மகளான ஷாலினி பாண்டேவும் தனுஷும் காதலிக்க, அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால், இது ஷாலினி பாண்டேவின் அண்ணன் அருண் விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தனுஷின் தந்தை ராஜ்கிரண் இறந்துபோகிறார். இந்த செய்தியை கேட்டவுடன் பாங்காக்கில் இருந்து உடனடியாக தனது ஊருக்கு வருகிறார் தனுஷ். தந்தையின் மரணத்தின் துயரத்தில் இருந்து மீளாமல் இருக்கும் தனுஷுக்கு அடுத்த அடியாக அவருடைய அம்மாவும் இறந்துபோக, சுக்குநூறாக உடைந்து போகிறார். ஆனால், மறுபக்கம் என்ன நடந்தாலும் திருமணம் நடக்கவேண்டும், இது நம் குடும்பத்தின் கவுரவ பிரச்சனை என சத்யராஜ் கூற, என்னால் திரும்பி வரமுடியாது என தனுஷ் சொல்கிறார். திருமணமும் நடக்காமல் போகிறது.

இந்தநிலையில் இந்த செய்தியை கேட்டவுடன் பாங்காக்கில் இருந்து உடனடியாக தனது ஊருக்கு வருகிறார் தனுஷ். தந்தையின் மரணத்தின் துயரத்தில் இருந்து மீளாமல் இருக்கும் தனுஷுக்கு அடுத்த அடியாக அவருடைய அம்மாவும் இறந்துபோக, சுக்குநூறாக உடைந்து போகிறார். ஆனால், மறுபக்கம் என்ன நடந்தாலும் திருமணம் நடக்கவேண்டும், இது நம் குடும்பத்தின் கவுரவ பிரச்சனை என சத்யராஜ் கூற, என்னால் திரும்பி வரமுடியாது என தனுஷ் சொல்கிறார். திருமணமும் நடக்காமல் போகிறது. ஆனால் தனுஷ் அமைதியாக அடிகளை வாங்கிக்கொள்ள, இட்லி கடையை அருண் விஜய் அடிக்க முற்படும்போது தனுஷ் திருப்பி அடிக்கிறார். இது மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது. அதன் பிறகு நடிகர் தனுஷ் அந்த இட்லி கடையையும் அவரையும் அருண் விஜய்யிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார். அவர் அப்பா கூறியது போல் அகிம்சை வழியில் காப்பாற்றுகிறாரா. இதற்கிடையே தனுஷுக்கும் நித்திய மேனன்க்கும் இருக்கும் காதல் கதை என்ன என்பது இந்த இட்லி கடையின் மீதி கதையாகும்.

படம் எப்படி இருக்கு

கதையின் நாயகனாக தனுஷ் இயக்கி மிக எதார்த்தமான நடிப்பையும் பக்குவமான நடிப்பையும் வெளிப்படுத்தி கதை முழுவதையும் தன் தோளில் சுமந்து மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ஒவ்வொரு காட்சி அமைப்பையும் மிக பொருத்தமாக மற்றும் ஆச்சரியமாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராஜ்கிரன் இப்படத்தில் தனுசுக்கு தந்தையாக நடித்துள்ளார் வழக்கம்போல் அவரது மிக சிறப்பான நடிப்பை இப்படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக சேரனின் தவமாய் தவமிருந்து படம் போல் இப்படத்திலும் மிக எமோஷனல் கதாபாத்திரத்தில் நடித்து படம் பார்க்கும் நம்மை அந்தக்கதையோடு ஒட்டும் வகையில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தனுசுக்கு ஜோடியாக நித்யா மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார் தனுசுக்கும் நித்யா மேனனுக்கும் இடையே நடக்கும் அந்த குறும்புக்கார காதல் கதை மிக அற்புதமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து நித்யா மேனனின் நடிப்பு மிக அருமையாக இப்படத்திற்கு பொருந்தியுள்ளது.

மேலும் தனுஷ் உடன் படம் முழுவதும் நடிகர் இளவரசன் நடித்துள்ளார் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக அருமையாக நடித்து அவருக்கும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்படுத்தி குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் தனுஷின் காதலியாக நடிகை ஷாலினி பாண்டே நடித்துள்ளார் அவருக்கு கொடுக்கப்பட்ட சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதற்குரிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் அருண் விஜய் இதற்கு முன்னால் என்ன அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அதை தொடர்ந்து இப்ப தனுஷின் இட்லி கடையிலும் ஒரு சிறப்பான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஒரு பணக்கார பையன் ஒரு ஈகோ கிளாசையும் வெளிப்பாட்டை மிக சிறப்பாக முறையில் கையாண்டு மிக உணர்ச்சியான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிபக்காக இயக்குநர் தனுஷை பற்றி முதலில் பேசியே ஆகவேண்டும். தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை அழகான, மிகவும் எமோஷனலான திரைக்கதையோடு நமக்கு வழங்கியுள்ளார். திரைக்கதையில் ஏற்றத்தாழ்வு என சிறப்பாக இயக்கியுள்ளார் தனுஷ்.

நடிகர் பார்த்திபன் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை மிக அழகானதாக மாற்றி நடித்துள்ளார்.இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ், சமுத்திரக்கனி சிறிய கதாபாத்திரம் என்றாலும் இருவரின் நடிப்பு பெரிதாக கதைக்கு ஒட்டவில்லை.

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு பெரும் தூணாக வந்து நிற்கிறது. சில பாடல்கள் பெரிதாக பொருந்தவில்லை.

ஒளிபதிவாளர் கிரண் கௌசிக்யின் ஒளிப்பதிவு காட்சிகளை மிக அழகாக இருந்தாலும் சில இடத்தில் சற்று கவனம் செலுத்திருக்க வேண்டும்.மேலும் இப்படத்தின் சண்டைக் காட்சிகள் மிக சிறப்பாக அமைந்தது.

பிளஸ்:
தனுஷ் ,ராஜ் கிரண் , நித்யா மேனன் , இளவரசன் நடிப்பு ,தனுஷ் இயக்கம் ,பாடல் மற்றும் இட்லி கடை இட்லி.
மைனஸ்:
ஒளிப்பதிவு , சிறிய காதபாதிரங்கள்

இட்லி கடை – கவிதை உணர்வு பூர்வமான பொழுதுபோக்கு.

Rating 4/5

 

Trending

Exit mobile version