News

போலியான ஏஐ படங்களை பகிர வேண்டாம் பிரியங்கா மோகன் வேண்டுகோள் !

Published

on

என்னுடைய புகைப்படத்தை தவறாக சித்தரிக்கும் சில ஏஐ புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. தயவு செய்து போலியான அந்த வீடியோ காட்சிகளை பகிர்வதை நிறுத்துங்கள் என நடிகை பிரியங்கா மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பிரியங்கா மோகன். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்து வருகிறார். அண்மையில் தெலுங்கில் வெளியான ஓஜி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் இடம்பெறுவதாக சில புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பரவி வந்தது. இந்த நிலையில் அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை என்றும் அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன் எக்ஸ் பகக்த்தில் பதிவிட்டுள்ள பதிவில் “தன்னை தவறாக சித்தரிக்கும் சில ஏஐ படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது. இது முற்றிலும் போலியானது காட்சிகளை பகிர்வதை தயவு செய்து நிறுத்துக்கங்கள். ஆக்கபூர்வமான படைப்பாற்றலுக்காக மட்டும் ஏஐ பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. எதை உருவாக்கிறோம் எதை பகிர்கிறோம் என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Trending

Exit mobile version