News

ராஜமவுலி – மகேஷ் பாபு படத்தின் டைட்டில் அறிவிப்பு !

Published

on

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்திற்கு தெலுங்கு சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படம் காசியின் வரலாற்றை பேரும் கதைக்களத்துடன் உருவாகி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மகேஷ் பாபுவுடன் இப்படத்தில், பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படம் வசூலில் மிகப்பெரிய வரலாற்று சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தென்னாப்பிரிக்காவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், வீடியோ வெளியீட்டு விழா ஜதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்ஸ் சிட்டியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில் ராஜமவுலி-மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்ட படத்திற்கு “வாரணாசி” என டைட்டில் அறிவித்தது படக்குழு.

 

Trending

Exit mobile version