News

என் வாழ்க்கையைக் கெடுத்த ‘இட்லி’ நடிகை – நடிகர் ரவி மோகன் !

Published

on

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாகவே கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது ரவி மோகன் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதில், 3 எழுத்து கொண்ட ஹிந்தி நடிகை ஒருவர் தனது வாழ்க்கையைக் கெடுத்துவிட்டதாக அவர் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு இடையே கடந்த 2024 செப்டம்பர் மாதம் விவாகரத்து அறிவிப்பு வெளியானது. இவர்களது விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ரவி மோகன், “மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து முழுமையாகப் பெற்ற பிறகே நான் மீண்டும் படங்களில் நடிக்க வருவேன்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாடகி கெனிஷா தனது சமூக வலைதளப் பக்கங்களை விட்டும், சென்னையை விட்டும் தற்காலிகமாக விலகிச் செல்வதாக அறிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய ரவி மோகன், “கெனிஷா மீது நடத்தப்பட்ட கடுமையான சைபர் வன்முறை (Cyber Bullying) காரணமாகவே அவர் இப்போது இந்த முடிவை எடுத்துள்ளார்” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு குறிப்பிட்ட பாலிவுட் நடிகை குறித்து ரவி மோகன் ஆவேசமாகப் பேசினார். அவர் கூறியதாவது:

“சில விஷயங்களை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். அந்த 3 எழுத்து கொண்ட நடிகையைப் பற்றி நான் பலமுறை கூறியுள்ளேன். பெயரை நேரடியாகச் சொன்னால் என் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என்று மிரட்டுகிறார்கள். அதனால்தான் சொல்கிறேன், அந்த ‘இட்லி’ நடிகையைத்தான் குறிப்பிடுகிறேன்.

அந்த நடிகையின் தலைமுறையைச் சேர்ந்த 3 முன்னணி நடிகர்கள் என்னிடம், ‘அந்த நடிகையால் எங்கள் குடும்பமே கெட்டுப்போனது; அவள் ஒரு குடும்பத்தை கெடுக்க வந்தவள்’ என்று அசிங்கமான வார்த்தைகளில் கூறினார்கள். இப்படி மூன்று பேரின் வாழ்க்கையைக் கெடுக்கத் தயாராக இருந்த ஒரு பெண், இன்று என்னைக் குறை சொல்கிறார். தங்களுக்கு ஏதேனும் பிரச்னை வந்தால் உடனே ‘பெண்ணியம்’ என்று ஒரு நாடகத்தை ஆரம்பித்து விடுவார்கள்.

என்னைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? எப்படித்தான் இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்களோ தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் என்னை காயப்படுத்த வேண்டாம். என்னை விட நன்றாக நடிக்கிறாயா, நடித்துக்கொள்; விருது வாங்குகிறாயா, வாங்கிக்கொள், நானே உன் காலில் விழுகிறேன். ஆனால், என்னை தவறானவன் என்று சொல்ல நீ யார்? நீ என்னைப் பெற்றெடுத்தாயா?” என்று மிகக் காரசாரமாகப் பேசியுள்ளார்.

நடிகர் ரவி மோகன் இவ்வளவு ஆவேசமாகத் தாக்கிப் பேசியுள்ள அந்த “3 எழுத்து ஹிந்தி நடிகை” யார்? அவர் ஏன் ‘இட்லி’ நடிகை என்று குறிப்பிடப்பட்டார்? என்ற விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் அந்த நடிகை யார் என்று தேடத் தொடங்கியுள்ளனர்.

Trending

Exit mobile version