Reviews

சிறை – திரைவிமர்சனம் !

Published

on

Cast: விக்ரம் பிரபு, L.K. அக்‌ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார், ஆனந்த தம்பிராஜா 
Production: ஆர்.எஸ். வெங்கட
Director: சுரேஷ் ராஜகுமாரி
Screenplay: தமிழ், சுரேஷ் ராஜகுமாரி
Cinematography: மதேஷ் மணிக்கம்
Editing: பிலோமின் ராஜ்
Music: ஜஸ்டின் பிரபாகரன
Language: Tamil
Runtime: 2H 05 Mins
Release Date: December 25 2025

இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, எல்.கே.அக் ஷய்குமார் மற்றும் நடிகை அனிஷ்மா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் சிறை.

வேலூர் சிறையில் இருக்கும் கொலை குற்றவாளியான அக் ஷய்யை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேருந்தில் அழைத்து செல்கிறார் போலீஸ் ஏட்டானா விக்ரம் பிரபு அவர்கள். செல்லும் வழியில் என்ன நடக்கிறது, நடந்தது என்பதுதான் படத்தின் ஒட்டுமொத்த கதையும்.

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான டாணாக்காரன் படத்தின் தமிழ் இப்படத்திற்கு கதை எழுதி உள்ளார். திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட கதை. இக்கதை 1990களில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போல போலீஸ் திரைக்கதை அம்சம் கொண்ட பல ஆயிரம் படங்கள் தமிழ் வெளிவந்திருந்தாலும். இது முற்றிலும் மாறுபட்ட ஒரு படம் என்றுதான் சொல்ல வேண்டும் அதை பல காட்சிகளில் நமக்கு சொல்லி விடுகிறார் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி.

ஒரு கைதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த செல்லும் வழியில் நடக்கும் சம்பவம் அட இது நாம் நினைத்த போல இல்ல வித்தியாசமான திரைப்படம் என்று சொல்லி விடுகிறது. இதற்கு முன்னர் போலீஸ் வேடங்களில் விக்ரம் பிரபு நடித்திருந்தாலும் இப்படத்தில் இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கொலை குற்றவாளியாக வரும் படத்தின் இரண்டாம் ஹீரோ அக் ஷய்யை. மனைவியுடன் காதல், பாசம், தன் நண்பனுக்காக போலீஸ் அதிகளிடம் பேசுவது, நீதிமன்றத்தில் இவர் நடந்து கொள்ளும் விதம் என எல்லா இடங்களிலும் ஸ்கோர் அள்ளுகிறார்.

ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக 5 ஆண்டுகளாக விசாரணை கைதியாக சிறையில் இருக்கும் அக் ஷய் வரும் காட்சிகளில் எல்லாம் உணர்வுபூர்வமாக எடுத்துள்ளார் இயக்குநர். அதுவும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் காதலிக்காக அவர் துடிக்கிற காட்சி ஆகட்டும் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் பேசுகிற காட்சி ஆகட்டும் அருமை. 1987 களில் சிவகங்கை பெண்ணாக நடிப்பில் கலக்கி உள்ளார் அறிமுக நாயகி அனிஷ்மா. விக்ரம் பிரபு மனைவியாக வரும் அனந்தா தம்பிராஜா சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக செய்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ஒரு காட்சிகள் மட்டுமே வந்தாலும் நம்மை பீல் பண்ண வைக்கிறார் மூணாறு ரமேஷ். படத்தில் நீதிபதியாக வரும் தேனப்பன் நம் மனதில் அப்படியே நிற்கிறார். மேலும் அம்மாவாக வருபர்கள் ஹீரோக்களுக்கு, நடிகையின் அக்கா, விக்ரம்பிரபுவின் போலீஸ் நண்பர்கள் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

ஒரு கைதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த செல்லும் போது நடக்கும் சம்பவங்கள், விசாரணை கைதிகளின் மனநிலை, ஒரே பெயரால் ஏற்படும் குழப்பம் என நமக்கு தெரியாத புது புது விஷயங்களை இப்படத்தின் கதையில் சொல்லி இருப்பது படத்தின் மிகப்பெரிய பிளஸ்.

90களில் நடக்கும் கதை என்பதால் வேலூர் பஸ்டாண்ட், சிவகங்கை கோர்ட், காவல் நிலையம், சிவகங்கை கிராமம் என அனைத்துமே அப்பிடியே தத்துரூபமாக நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார் ஒளிப்பதிவாளர் மதேஷ்மாணிக்கம். அதே போல இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசை மட்டுமல்ல பின்னணி இசையிலும் கலக்கி உள்ளார்.

இது ஒரு உண்மை சம்பவமென்பதால் கதையிலும், திரைக்கதையிலும் ஒரு உயிர் ஓட்டம் இருக்கிறது. காவல் அதிகாரிகளும் நல்லவர்கள் இருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகளுக்கு இத்தனை பிரச்சனை இருக்கிறது. போலீஸ் அதிகாரிகளும் இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என திரைக்கதையில் மிக அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.

நீதி பொதுவானது அது எளியவர்களுக்கும் கிடைக்க வேண்டும். நீதிபதிகள் இப்படி இருக்க வேண்டும் என்பதை சிறை படத்தின் மூலம் நமக்கு காண்பித்து இருப்பது கொண்டாட பட வேண்டி ஒன்று. ஒட்டு மொத்தமாக ஒரு தரமான மன நிறைவான படத்துடன் இந்த வருட சினிமா நிறைவு பெறுகிறது என்பது ஆக மகிழ்சி.

Rating 3.5/5

 

 

Trending

Exit mobile version