News

ரவிக்குமார் இயக்கத்தில் சூரி: நாயகியாக மமிதா பைஜு?

Published

on

தற்போது ‘மண்டாடி’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் பிஸியாக இருக்கும் நடிகர் சூரி, அதனைத் தொடர்ந்து இயக்குநர் ரவிக்குமார் உடன் புதிய படத்தில் இணையவுள்ளார். 2015-ம் ஆண்டு நடந்த சென்னை பெருவெள்ளத்தை மையமாகக் கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ள இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்க, நடிகை மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படப்பிடிப்பு தேதிகள் உறுதியானதும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரி தற்போது நடித்து வரும் ‘மண்டாடி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், இந்தப் புதிய படத்தின் வேலைகள் முழுவீச்சில் தொடங்கும்.

மற்ற நடிகர், நடிகைகளுக்கான தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அறிவிப்பு வெளியாகும் முன்பே ஓடிடி (OTT) உரிமம் விற்கப்பட்டுவிட்தால் படக்குழு மிகுந்த மகிச்சியுடன் இருக்கிறார்கள்.

Trending

Exit mobile version