News
என்னை ட்ரோல்ஸ் செய்யவதற்கு பணம் கொடுக்கிறார்கள் – ராஷ்மிகா மந்தனா !
தெலுங்கு சினிமாவில் மன்னணி நடிகையாக கொடி கட்டி பறக்கும் நடிகைதான் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான குபேரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது ராஷ்மிகா மந்தனா மைசா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் மீது எந்த அளவுக்கு ரசிகர்கள் அன்பு கொண்டுள்ளார்களோ அதே அளவுக்கு இவரை வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இவரை ட்ரோல்ஸ் செய்து வருகிறார்கள்.
இந்த ட்ரோல்ஸ் குறித்து அண்மையில் பேசியுள்ள ராஷ்மிகா மந்தனா ‘ நான் மிகவும் உணர்வுபூர்வமான ஒரு நபர். அதை நான் வெளி உலகிற்கு காட்ட விரும்பவில்லை. நான் அப்பிடி வெளிக்காட்டினால் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறார் என்று கூறுவார்கள். எனக்கு எதிராக ட்ரோல்ஸ் செய்ய பணம் கொடுக்கிறார்கள். சிலர் ஏன் இந்த அளவுக்கு கொடூரமாக செயல் பட்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை எனக்கு. என்னை வளர விடாமல் தடுக்கிறார்கள். இது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. என் மீது அன்பு காட்ட முடியாவிட்டாலும் வெறுப்பை கக்காமல் அமைதியாக இருங்கள்’ என்று மிகவும் வேதனையுடன் கூறினார்.