Connect with us
 

News

முதல்வரை நேரில் சந்தித்து கொரோனா தடுப்பு நிதியாக 50 லட்சம் வழங்கிய ரஜினி !

Published

on

கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் படு வேகமாக பரவு வருகிறது. இதன் தொற்று பரவால் இருக்க மக்களிடம் சிகிச்சைக்காக நிதியுதவி வழங்குமாறு அன்பு வேண்டுகோள் விடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதனையடுத்து தமிழ் சினிமாவின் பல முன்னணி பிரபலங்கள் நன்கொடை வழங்கினர் அந்த வரிசையில் சிவகுமார் குடும்பம் ரூபாய் 1 கோடி, அஜித் குமார், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், ஆகியோர் தலா 25 லட்சமும், இயக்குனர்களான வெற்றிமாறன், மோகன்ராஜா, ஷங்கர் ஆகியோர் தலா 10 லட்சம் வங்கினர்.

இந்நிலையில் சென்னை தலைமைசெயலகத்திற்கு இன்று வந்த ரஜினிகாந்த் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா தடுப்பு நிதியாக ரூபாய் 50 லட்சம் காசோலையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் அனைவரும் கண்டிப்பாக முககவம் அணிய வேண்டும் என்று கூறி விடைபெற்றார்.