Connect with us
 

News

யாரை இங்கு நம்புவது என்றே எனக்கு தெரியவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ் !

Published

on

தமிழ் சினிமாவில் தன் கடின உழைப்பால் இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் கைவசம் துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் மற்றும் மோகன் தாஸ் போன்ற படங்கள் வெளிவரவிருக்கிறது. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நம்பிக்கை வைத்திருந்த ஒருவர் தனக்கு செயல்பட்டது குறித்து பேட்டி ஒன்றில் கூறி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் அவர் கூறியிதாவது:- ரசிகர்களிடம் பணத்தை பெற்று கொண்டு என்னைபற்றிய பர்சனல் விவரங்களை கூறுவது போன்ற செயல்களை என்னுடன் இருந்து கொண்டே என்னுடன் இருந்த எனக்கு மிகவும் நம்பிக்கையான நபர் ஒருவர் இதுமாதியான செயலை செய்து எனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.

அவர் மீது புகார் அளிக்க பலர் கூறினார்கள் என்ன இருந்தாலும் தப்பு நடந்து விட்டது. இனிமேல் நாம் மிகவும் கவனமாக இருந்து கொள்ள வேண்டும் என்ற்று நான் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டேன். என்னை போல் மற்றவர்களுகும் எதுவும் இதுபோன்ற துரோகங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக இதனை நான் சொல்கிறேன்.

எனவே யாரை நம்புவது யாரை நம்மக்கூடாது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடையை வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.