Connect with us
 

News

ஆர்யாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு !

Published

on

தன்னை திருமணம் செய்வ்வதாக கூறி ரூபாய் 71 லட்சம் மோசடி செய்ததாக ஆர்யா மற்றும் அவர் மனைவி உள்ளிட்டோர் மீது வித்ஜா என்ற பெண் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஆர்யா மீது புகார் வழக்கு பதிவு செய்ய சிபிசிஜடிக்கு உத்தவிடக்கோரி ஜெர்மன் நாட்டை சேர்ந்த வித்ஜா என்ற பெண் வழக்கு தொடர்ந்திருக்கிறார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் ஆர்யா சுமாராக 71 லட்சம் மோசடி செய்த்தாக ஆர்யா மற்றும் அவர் மனைவி உள்ளிட்டோர் மீது வித்ஜா புகாரளித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது விசாரணை நிலை குறித்து பதிலளிக்க சிபிசிஜடி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 17-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.