Connect with us
 

News

ஷாருக்கான் படத்திலிருந்து விலகிய நயன்தாரா !

Published

on

தமிழில் பிகில், தெறி ஆகிய படங்களை தொடர்ந்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்கநர்களில் ஒருவரானார் இயக்குநர் அட்லி. தற்போது ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தை இயக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார் அட்லி.

இந்த படம் மூலம் இந்தி சினிமாவுக்கு முதல் முறையாக அடியெடுத்து வைக்கவிருந்தார் நயன்தாரா. ஆனால் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருப்பதால் படப்பிடிப்பை குறிப்பிட்ட தேதியில் ஆரம்பிக்க முடியாமல் தாமதமாகிறது.

கடும் மன உளைச்சளில் இருக்கும் ஷாருக்கான் உடனடியாக படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் உள்ளார். இந்த படத்துக்காக நயன்தாரா ஒதுக்கிக்கொடுத்த தேதி விரயமாகி வருகிறதாம். தாமதமாக படப்பிடிப்பை தொடங்கினால் வேறு படங்களுக்கு கொடுத்துள்ள கால் ஷீட்டில் சிக்கல் ஏற்படும்.

எனவே ஷாருக்கான் படத்திலிருந்து விலக நயன்தாரா விலக முடிவு செய்துள்ளதாகவும் அவருக்கு பதிலாக சமந்தாவை தேர்வு செய்ய படக்குழுவினர் யோசித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

தி மேமிலி மேன் 2 என்ற வெப் தொடருக்கு பின்னர் சமந்தாவின் ஹிந்தி மார்கெட் வெகுவாக உயர்ந்துள்ளதாம். அவருக்கு இந்தி படங்களில் நடிக்க அழைப்புகளும் வருகின்றன. எனவே ஷாருக்கான் படத்தில் சமந்தா கண்டிப்பாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த தகவலை படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.