Connect with us
 

News

சம்பள பிரச்சனையில் தமன்னா மீது வழக்கு தொடர்ந்த நிறுவனம் !

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உள்ள நடிகை தமன்னாவை தெலுங்கு தொலைக்காட்சியில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்தது பின்னர் என்ன காரணமோ தெரியவில்லை திடீரென நீக்கிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சியான நடிகை தமன்னா நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வக்கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் தன்னை எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று நீக்கியது தவறு என்றும் தனக்கு சம்பள மீதம் உள்ளதும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமன்னா புகாருக்கு எதிராக நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் மாஸ்டர் செப் நிகச்சிக்காக தமன்னாவை 18 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்க ரூ.2 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தோம். ஆனால் தமன்னா 16 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்றார். தமன்னாவுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் கொடுத்து விட்டோம்.

ஆனால் வேறு பணிகளுக்கு சென்று எங்கள் படப்பிடிப்பில் தமன்னா தாமதம் செய்ததால் எங்களுக்கு ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் தமன்னா எங்கள் மீது உண்மைக்கு மாறான தகவலை கூறியுள்ளார். விடுபட்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பையும் அவர் முடித்து கொடுத்தால் மீதி பணத்தையும் கொடிக்க தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.