Connect with us
 

News

ஏப்ரல் மாதம் வெளியாகும் சுந்தர்சியின் அரண்மனை 4 !

Published

on

இயக்குநர் சுந்தர் சி கடந்த 2014ம் ஆண்டு இயக்கி வெளியிட்ட அரண்மனை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை இயக்கினார் சுந்தர் சி. தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் சுந்தர் சி முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து தொழிநுட்ப பணிகளும் முடிவடைந்து வெளியீட்டு தயாராக உள்ளது. இந்த நிலையில் அரண்மனை படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்பு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதில் அரண்மனை 4 திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது என தனது எக்ஸ் பக்கத்தில் அரணமனை 4 படத்தின் போஸ்டருடன் அறிவித்துள்ளார்.