Connect with us
 

News

ரஜினிகாந்தை சந்தித்த சாய் தன்ஷிகா பட ஹீரோ !

Published

on

நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தி புரூப். இயக்குநர் ஐ.ராதிகா என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். க்ரைம் த்ரில்லா படமாக உருவாகியுள்ள இது மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சாய் தன்ஷிகாவுடன் அசோக், ரித்விகா, இந்திரஜா, மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் தி புரூப் படக்குழு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து வாழ்துக்களை பெற்றுள்ளனர்.

படக்குழு சார்பில் நாயகன் ருத்வீர் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார். அப்போது படம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த் படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவரது மகளாக நடித்திருந்தாய் சாய் தன்ஷிகா என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவருக்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கும் இருக்கும் நட்பை பயன்படுத்தி சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளது படக்குழு.