Connect with us
 

News

பிரியா பவானி சங்கரின் 10 வருட காதல் முடிவுக்கு வந்ததா?

Published

on

சின்னத்திரையில் நடித்து பின்னர் தன் திறமையால் வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் ப்ரியா பவானி ஷங்கரும் ஒருவர். மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராகியுள்ளார்.

கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண்விஜய்யுடன் மாபியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் 8 படங்கள் உள்ளது. அதில் இரண்டு படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. மிக குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தன் வசம் சேர்ந்த அழகான அமைதியான ஆர்பாட்டம் இல்லாத ஒரு நடிகை.

பிரியா பவானி சங்கர் கடந்த 10 வருடங்களாக ராஜவேல் என்பவரை காரலித்து வந்தார். அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வந்தார்.

இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் உங்களிடம் யாராவது என்னிடம் வாழ்க்கை முழுவதும் என்கூட இருப்பேன் என்று சொன்னால் எனது ரியாக்சன் இதுதான் என்று குறிப்பிட்டு பொய்சொல்கிறான் என்ற தொணியில் புன்முறுவலோடு கும்பிட்டு வழியனுப்புவதுபோல் ஒரு மீம்சை பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பிரியா பவானி சங்கர் தன் காதரை பிரிந்து விட்டாரா என்ற கேள்வியை வலைத்தளத்தில் கேட்டு வருகிறார்கள். இதற்கு பிரியா பவானி சங்கர் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும்.