Connect with us
 

News

மாநாடு வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்படுகிறது – சுரேஷ் காமாட்சி !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் என பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டு கடந்த தீபாவளி பண்டிகைக்கு தயாராகவிருந்த நிலையில் அந்த நாளில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கு அதிக திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டதால் மாநாடு திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு வெளியீட்டை தள்ளி வைத்தனர் படக்குழு.

இந்த நிலையில் இந்த மாதம் 25-ம் தேதி மாநாடு திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்து அதற்காக ப்ரோமோஷன் பணிகளும் நடைபெற்று வந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அதாவது கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு விடுத்தார்.

இந்த அறிவிப்பௌ கேட்டு அதிர்ச்சியடைந்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார் அதில் தமிழக அரசின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா வெகுவாக பாதிக்கும் என்றும் கூறினார்.

தற்போது மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவில் நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு இதின் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

ஆனால் தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த மனவலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.