Connect with us
 

News

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வருத்தம் !

Published

on

நன்றாக தமிழ் பேச தெரிந்த தமிழ் நடிகை Aishwarya Rajesh தன் கதாப்பாத்திரத்துக்கு முக்கியம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் நடிகை. இவர் நடிப்பில் வெளியான கனா இவரின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது.

தற்போது இவர் சுழல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இம்மாதம் வெளியாகவுள்ள இதற்கான விளம்பர பணிகளில் இறங்கியுள்ளார் அப்படி கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் பேசிய Aishwarya Rajesh.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்கள் எனக்கு அமைகின்றது. பெண்களை மையப்படுத்தி சொல்லப்பட வேண்டிய கதைகள் தமிழ் சினிமாவில் நிறையவே இருக்கிரது. தமிழ் சினிமா இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வேலையை ஆரம்பித்துள்ளது.

ஹாலிவுட்டில் பெரும்பாலான படங்கள் பெண்களை மையப்படுத்தி முதன்மைபடுத்தி பல படங்கள் வருகின்றன குறிப்பாக சரி பாதி அதாவது 50 சதவீதம் ஹீரோக்களை முதன்மை படுத்தியும் 50 சதவீதம் ஹீரோயின்களை முதன்மை படுத்தியும் படங்கள் அன்று முதல் இன்று வரையில் வெளியாகிறது.

இந்திலும் கதாநாயகிகளை முதன்மைப்படுத்தியும் பெண்களை மையமாக வைத்தும் பல படங்கள் வருகின்றன. எனக்கும் பெண்களை முதன்மைப்படுத்தும் கதைகளில் நடிக்க வாய்ப்புகள் வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு பொதுவாகவே கதா நாயகர்களுடன் நடிக்க வாய்புகள் வருவது இல்லை அதுலும் குறிப்பாக பெரிய பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்புகள் வருவதும் இல்லை இணைந்து நடிக்க என்னை அழைக்காது ஏன் என்ற கேள்வியும் குழப்பமும் எனக்கு இன்று வரையில் உள்ளது என்றும் கூறினார் Aishwarya Rajesh.