Connect with us
 

News

ஸ்டைல் கிங் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது !

Published

on

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் படு வேகமாக பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்படுவது திரைப்பிரபலங்கள். அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளாவது :- எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. நான் இப்போது வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்ப்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வீட்டிலேயே இருங்கள் பாதுகாப்பாக இருக்கங்கள் வாய்ப்பு கிடைத்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்னுடைய ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கவலை கொள்ள வேண்டாம் நான் நலமுடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜூன் தற்போது புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படம் செம்மரக்கட்டை கடத்தல் சம்மந்தப்பட்ட திரைப்படமாக உருவாகுறது.

https://www.youtube.com/watch?v=-H86zK_XfqA