Connect with us
 

News

மிஸ்ட்ரி திரில்லர் கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ் !

Published

on

விக்னேஷ் கார்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ‘திட்டம் இரண்டு’ இப்படத்திற்க்கு கோகுல் பினாய் ஒளிப்பதிப்பு செய்ய சதீஷ் ரகுநாதன் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிப்பதி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில்.

தமிழ் பட உலகில் நடிகர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து பல லட்சம் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்க்கு முன்பாக ஒரு சில படங்களில் படத்தின் நாயகியாக இல்லாமல் கதையின் நாயகியாக நடித்திருக்கிறேன். ஆனாலும் இந்த ‘திட்டம் இரண்டு’ படம் எனக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த படம் என்று சொல்லலாம்.

ஒரு படைப்பின் வடிவத்தை விட அது நமக்கு தரும் உணர்வு பெரியது என்று சொல்வார்கள். அந்த வகையில் ‘யுவர்ஸ் சேம்ஃபுல்லி’ என்ற குறும்படத்தின் மூலம் அதிக கவனத்தை தன் வசம் ஈர்த்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் மிகவும் வித்தியாசமான கதை கொண்ட இப்படத்தை இயக்குகிறார். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மிஸ்ட்ரி திரில்லர் கதை கொண்ட இப்படம் யாரும் எதிர்ப்பார்க்காத பல திருப்பங்களுடன் உருவாகி வருகிறது.

எனக்கு கொடுக்கப்பட எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நூறு சதவீத உழைப்பை அந்த கதாப்பாத்திரத்துக்கு கொடுத்து திரைக்கு வரும் ரசிகர்களை ஆச்சர்ய படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.