Connect with us
 

News

இசைப்புயளின் தாய் கரிமா பேகம் இன்று காலமானார் !

Published

on

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தாயார் ‘கரிமா பேகம்’ அவர்கள் சற்று முன்னர் காலமானதாக தகவல்கள் வெளிவந்தன.

இன்று ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியா மட்டும் அல்ல உலக நாடுகளிலும் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். உலகின் மிக உயர்ந்த விருதான ஆஸ்கர் விருதை ஒருமுறை பேற வேண்டும் என்பது பலரின் கனவு ஆனால் அந்த விருதை இரண்டு முறை பெற்றவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இவரின் தந்தை ஏ.ஆர்.ரஹ்மானின் சிறு வயதிலேயே இறந்து விட அவரது அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். தனது அம்மாதான் எனக்கு எப்பவும் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

நாம் அதாவது நான் எடுக்க தயங்கும் பல அற்புதமான முடிவுகளை அவர் மிக நிதானமாக எடுப்பார் அதை நான் பார்த்துள்ளேன் என் அம்மா மிகவும் துணிச்சலான பெண் என்று கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாகவும் இன்று சிகிச்சை பலனின்று காலமானதாகவும் கூறப்படுகிறது.

ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் மறைவை அடுத்து திரையுலகினர் ஏஆர் ரஹ்மானின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர்ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் அவர்கள் நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது