Connect with us
 

News

தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் பாராட்டும் பிரபலங்கள்

Published

on


கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மகாநடி திரைப்படம் தெலுங்கில் தேசிய விருதை பெற்று கொடுத்துள்ளது.சினிமாவின் மிகச் சிறந்த நகைகளில் ஒருவராக பார்க்கபடுகிறார் கீர்த்தி சுரேஷ். காரணம் கடந்த ஆண்டு வெளியான சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமாக தெலுங்கில் எடுக்க பட்டு அது தமிழிலும் டப் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது.

இன்னும் சாவித்ரி உயிருடன் இருக்கிறார் என்று இன்றைய தலைமுறைக்கு தன் நடிப்பின் மூலம் காட்டியவர் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்ததிற்க்காக இந்த ஆண்டின் தேசிய விருது வழங்கப்பட்டது. 66வது தேசிய விருதுகள் வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 9ம் தேதி) அறிவிக்கப்பட்டது. அப்போது சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த தமிழ் படமாக பாரம் தேர்வானது .

தேசிய விருது வென்று தென்னிந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த கீர்த்தி சுரேஷிற்கு திரை பிரபலங்ககள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.