Connect with us
 

News

சர்ஜுன் இயக்கத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் பிரியா பவானி ஷங்கர் !

Published

on

சின்னத்திரை சீரியல் இருந்து பெரியதிரையில் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் கார்த்தியுடன் இணைந்து நடித்த கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர் அருண் விஜய்யுடன் ஃமாபியா போன்ற நல்ல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

பிரியா பவானி ஷங்கர் தற்போது அதர்வாவுடன் குருதி ஆட்டம் எச்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யானுடன் ஓமணப் பெண்ணே போன்ற படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார் விரைவில் இப்படங்கள் திரைக்கு வரவிருக்கிறது.

தற்போது ராகவா லாரன்ஸ் ஜோடியாக ருத்ரன், கமல் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 சிம்பு – கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்து தல அருண் விஜய்யின் 33-வது படம் என கையில் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் மேலும் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை நயன்தாரா முதல் முறையாக இரு வேடத்தில் நடித்த ஐரா படத்தை இயக்கிய சர்ஜூன் இப்படத்தை இயக்குகிறார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளதாம்.

ஐரா படம் போல இப்படமும் கதாநாயகியை வைத்து உருவாகும் இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் டிவி ரிப்போர்ட்டராக நடிக்கிறாராம். மேலும் இப்படத்தில் மெட்ரோ சிரிஷூம் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறாராம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை இர்பான் மாலிக் தயாரித்து வருகிறார்.