Connect with us
 

Gallery

“மாஸ்டர்” படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்ட விஜய் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வேகமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம் , நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்று வந்த போது படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரி துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

சென்னையில் உள்ள விஜய்யின் வீட்டில் சோதனை செய்தனர் . நேற்று மாலை விஜய்யின் வீட்டில் சோதனை முடிவடைந்தது .நடிகர் விஜய்யின் வீட்டில் பணம் எதுவும் கைப்பற்றபடவில்லை என சோதனையின் முடிவில் வருமான வரி துறையினர் அறிக்கை வெளியிட்டனர்.

விஜய் நெய்வேலியில் நடந்து வரும் “மாஸ்டர்” படப்பிடிப்பில் இன்று காலை மீண்டும் கலந்து கொண்டார். இதனால் விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பு நடக்கும் என் .எல் .சி சுரங்கத்தின் முன்பு பா ஜா க வினர் போராட்டம் நடத்தினர். என்எல் சி யில் படப்பிடிப்பு நடக்க கூடாது என்று போராட்டம் நடத்தினர்.

இதை அறிந்த விஜய் ரசிகர்கள் , விஜய்க்கு ஆதரவு தெரிவித்து என் எல் சி முன்பு அதிகமான ரசிகர்கள் குவிந்தனர் . பாதுகாப்பு கருதி போலிசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர் . இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

By : Saranya