Connect with us
 

News

11 ஆண்டுகளுக்கு பின்னர் இணையும் காதலில் விழுந்தேன் ஜோடி !

Published

on

2008 ஆம் ஆண்டு வெளியான ‘காதலில் விழுந்தேன்’படம் மூலம் ரசிகர்கள் மனதில் அப்போது ஒரு நீங்காத கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா இப்படத்தில் இவர் நகுல் அவருக்கு ஜோடியாக நடிதிருப்பார். இப்படத்தின் மிகப்பெரிய வரவேற்ப்பை தொடர்ந்து இருவரும் இணைந்து இரண்டாவது படமாக ‘மாசிலாமணி’ என்ற படத்தில் நடித்தார்கள். அதன் பின்னர் சுனைனா யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை, தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி
உள்ளிட்ட படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக அனைவராலும் பார்க்கப்பட்டார்.

தனக்கு ஹூரோயின் வேடம்தான் வேண்டும் என்று அடம் பிடிக்காமல் தன் திறமையை வெளிக்காட்டும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் நடித்து வருகிறார். இப்படி தன் கதாப்பாத்திரங்கை பார்த்து பார்த்து சிற்பம் போல் செதுக்கி நடித்து வருகிறார் சுனைனா.

அந்த வகையில் தற்போது அந்தவகையில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் “ட்ரிப்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை அடுத்து காதலில் விழுந்தேன்,மாசிலாமணி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘எரியும் கண்ணாடி’என்ற படத்தின் மூலம் நகுலுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறார்.

சச்சின் தேவ் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறாராம். கொரோனா ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதும் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது. இந்த பேவரைட் ஜோடியை இணைத்து மீண்டும் திரையில் காண இருவரது ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.