Connect with us
 

News

கொரோனா தடுப்பு பணிக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நிதி அகர்வால் நிதியுதவி !

Published

on

தமிழகம் முழுவதும் கொரோனா அலையின் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா தொற்றை தடுக்க மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் அனைவரும் நன்கொடை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பல முன்னணி நடிகர்க்கள் முதல்வரை நேரில் சந்தித்தும் ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

சிவகுமார் குடும்பம் ரூபாய் 1 கோடி, ரஜினிகாந்த் ரூபாய் 50 லட்சம், விக்ரம் ரூபாய் 30 லடம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் குமார், உதய நிதி, சிவகார்த்திகேயன், ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றி மாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா 10 லட்சம் வழங்கினர்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நடிகை நிதி அகர்வால் ஆகியோர் தலா 1 லட்சம் வழங்கியுள்ளனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஊரடங்கால் வேலையின்றி தவிர்க்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக பெப்சி அமைப்புக்கும் ரூபாய் 1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.