Connect with us
 

News

7 வருடங்களுக்கு பின்னர் தன் அடுத்த படத்தை வெளியிடும் அல்போன்ஸ் புத்திரன் !

Published

on

இயக்குநர் Alphonse Puthren ‘நேரம்’ என்ற படத்தின் மூலம் திரையிலகில் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ‘பிரேமம்’ என்ற படத்தின் இந்தியா முழுவதும் புகழ்பெற்றார். குறிப்பாக இப்படம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது. சென்னையில் மட்டும் இப்படம் தொடர்ந்து ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர் பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் ‘கோல்ட்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் Alphonse Puthren.

இந்த நிலையில் ‘கோல்ட்’ படத்தின் வெளியீட்டை Alphonse Puthren அறிவித்துள்ளார். அதன் படி செப்டம்பர் 8-ம் தேதி ஓனம் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலும் டப்பிங் செய்து வெளியாகவுள்ளது.