Connect with us
 

News

பத்து தலை படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பம் இதில் கெளதம் கார்த்திக் கலந்து கொள்கிறார் !

Published

on

நடிகர் சிம்பு சமீபத்தில் தனது Pathu Thala படத்தின் முதல் ஷெட்யூலை கர்நாடகாவில் முடித்தார். இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியுள்ளதாகவும், நடிகர் கௌதம் கார்த்திக் இன்று படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, சிம்புவும் அடுத்த இரண்டு நாட்களில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு தனது காட்சிகளின் படப்பிடிப்பை தொடருவார் என்று கூறப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு படப்பிடிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒபேலு என் கிருஷ்ணா இயக்கும் Pathu Thala படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் ப்ரியா பவானி சங்கர் இப்போது ஐரோப்பாவுக்கு விடுமுறைக்கு சென்றுல்லதால் திரும்பிய பிறகு செட்டில் சேர்ந்து தனது பகுதியை படமாக்குவார் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் மாதத்திற்குள் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் தவிர, கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, கலையரசன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஓபேலு என்.கிருஷ்ணா இயக்கும் Pathu Thala படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். தற்போது விடுமுறைக்காக ஜரோப்பியா சென்றுள்ள பிரியா பவானி சங்கர் சென்னை வந்ததும் அவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. பத்து தலை படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் அடுத்த மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்புவுடன் இப்படத்தில் கெளம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இறுதியாக சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான திரைப்படம் மஹா. தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு. திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.