Connect with us
 

News

எனக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் இனி நான் நடிக்க மாட்டேன் !

Published

on

இனி என் கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் தமிழ் மொழிக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன் இப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இனி தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என கூறியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ளதாவது ‘ இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “நான் சினிமா துறையில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இனிமேல் என்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். அது ரூ.500 கோடி வசூலிக்கும் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லையென்றால் அதில் நடிக்கப் போவதில்லை. அந்தப் படம் பிரம்மாண்டமாக ஓடி வசூலை குவித்தாலும் என்னுடைய கதாபாத்திரத்தை யாரும் நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள்.

நான் சிறுவயது முதல் ரசித்து வளர்ந்த ஊர்வசி, ஷோபனா, கஜோல் உள்ளிட்ட நடிகைகள் அனைவரும் ரசிகர்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தனர். அவர்கள் வழியிலேயே நானும் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று மாளவிகா மோகனன் கூறினார்.