Connect with us
 

News

சாய் பல்லவியின் திருமண செய்தி நண்பர்கள் கூரிய உண்மை !

Published

on

நடிகை சாய் பல்லவி பிரேமம் என்ற ஒரு படத்தின் மூலம் இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகை. அப்படத்தை தொடர்ந்து தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் அதிக படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை பட்டியலில் இணைந்தார். நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, நானியுடன் ஷியாம் சிங்க ராய் என கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான இரண்டு தெலுங்கு படங்களில் மிகப்பெருய வெற்றி படமாக அமைந்தது.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் விராட பருவம் இதில் ராணா கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் பின்னர் வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. சிரஞ்சீவியின் ‘போலோ சங்கர்’ படத்தில் அவரின் தங்கையாக நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்கவில்லை சாய்ப்ல்லவி.

இந்த நிலையில் சாய் பல்லவிக்கு திருமணமாகவுள்ளதாகவும் அதனால்தான் புதிய படங்களில் நடிக்கவில்லை என்றும் ஒரு செய்தி பரவி வருகிறது. இதனை மறுத்துள்ள சாய் பல்லவி நான் எதிர்பார்க்கும் கதைகள் மற்றும் கதாப்பாத்திரங்கள் அமையாத காரணத்தால் மட்டுமே புதிய படங்களில் நடிக்கவில்லை என்று கூறுகிறார்கள் சாய் பல்லவியின் நெருக்கமான வட்டாரம்.