Connect with us
 

News

பெண் இயக்குநரின் இயக்கத்தில் புதிய படத்தில் ஜோதிகா !

Published

on

திருமணமான பின்னர் நடிப்பை ஓரம் கட்டிவிட்டு கணவர் குழந்தைகள் என இருந்த நடிகை ஜோதிகா குழந்தைகள் இருவரும் வளர்ந்த பின்னர் மீண்டும் நடிப்பிற்கு திரும்பினார். அப்படி வந்து முதலில் நடித்த திரைப்படம் 36 வயதினிலேயே.

அப்படத்தை தொடர்ந்து தான் நடிக்கும் அனைத்து படங்களையும் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். ஜோதிகா நடிக்கும் பல படங்களை சூர்யா – ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்தும் வருகிறது.

இந்த நிலையில் இவர் இறுதியாக நடிப்பில் வெளியான உடன் பிறப்பே படத்தை தொடர்ந்து கண்டநாள் முதல் படத்தின் இயக்குநர் பிரியா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றதாம்.