Connect with us
 

News

ஜி.வி.பிரகாஷ் இசையில் 12 மொழிகளில் உருவாகும் தேச பாடல் !

Published

on

இந்திய சுந்திர தின 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே 50-வது சுதந்திர தினத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைர முத்து வரிகள் தாய்மண்ணே வணக்கம் பாடல் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பிரபலமானது.

இதுபோல் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தியா முழுவதும் உள்ள சுதந்திர வீரர்களின் பெருமைகளை போற்றும்படி ஜி.வி.பிரகாஷ் இசையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட 12 மொழிகளில் இன்னொரு பாடல் உருவாகிறது.

இந்தியாவில் உள்ள முன்னணி நடிகர் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் இந்த பாடல் காட்சியில் பங்குபெறுகிறார்கள். ஏ.ராஜசேகர் இயக்கத்தில் அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் இந்த பாடல் உருவாகிறது. கன்னியாகுமரியில் காஷ்மீர் வரை பல்வேறு இடங்களில் இப்பாடல் படமாக்கப்பட உள்ளது.